ஓவர் குடி.. அடுத்த சாவித்ரியாக மாறுகிறாரா ஓவியா.. செய்யாறு பாலு சொன்ன ஷாக்கிங் தகவல்!

சென்னை: சினிமாவில் நடிகை ஓவியாவுக்கு அவர் நினைத்த அளவுக்கு பெரிய இடம் கிடைக்காத விரக்தியில் தான் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார் என்றும் குடியால் வாழ்க்கையையே இழந்த சாவித்ரி போல இவரும் ஆகப் போகிறாரா என செய்யாறு பாலு வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் 43 வயதிலும் சில நடிகைகள் முன்னணி நடிகைகளாக நடித்து வரும்

குறைந்த விலையில் 3 எலக்ட்ரிக் பைக்குகளை வெளியிடும் ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பொதுப் பங்கு வெளியிட்டிருக்கு தயாராக உள்ளதால் தனது எதிர்கால திட்டங்களில் மிக முக்கியமாக கம்யூட்டர் செக்மென்ட்டுக்கான அதாவது ஆரம்ப நிலை செக்மென்ட்க்கு ஏற்ற மூன்று எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை வருகின்ற 2025 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக ஏற்கனவே இந்நிறுவனம் காட்சிப்படுத்திய பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள் கான்செப்ட் களில் இருந்து மாறுபட்டதாக துவக்க நிலை சந்தைக்கு ஏற்றதாகவும் இந்த மாடல்கள் அமையும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. Ola … Read more

வாகன இறக்குமதிக்கான பாதை வரைபடம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்..

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும்; அமைச்சர் சுட்டிக்காட்டினார். வாகன இறக்குமதி குறித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தேவையான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை வரைபடம் வெளியிடப்படும் … Read more

Shah Rukh Khan: தன் புது வீட்டிற்குப் பெற்றோரின் பெயர் – நெகிழவைக்கும் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்கள், ஐ.பி.எல் போட்டிகள் என எப்போதும் பிஸியாக இருக்கிறார். அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமிதாப் பச்சன் குடும்பத்தில், அவரது மகள் வழிப்பேரனும் சுஹானா கானும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சுஹானா அமிதாப் பச்சன் குடும்பத்தோடு வெளியில் புறப்பட்டுச் சென்ற காணொளி சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் வெப் சீரியஸ் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர்யன் கான் … Read more

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: தாம்பரம் ரயில்வே கேண்டீன் உரிமையாளருக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது. முன்னதாக ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.4 கோடி சிக்கியது. இந்தப் பணத்தை கொண்டு சென்றதாக பாஜக-வின் நெல்லை தொகுதி வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களான திரு.வி.க.நகரைச் சேர்ந்த சதீஷ், அவரது தம்பி நவீன், ஸ்ரீவைகுண்டம் பெருமாள் ஆகியோரை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அந்தப் … Read more

4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்

வயநாடு: மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் என்பது தான் வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை டவுன் பகுதியின் தற்போதைய நிலை. அங்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. பொதுவாகவே கேரளம் அதீத மழைப்பொழிவை … Read more

பிரான்ஸில் இன்டர்நெட் கேபிள்கள் சேதம்: இணைய சேவை பாதிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஃபைபர்-ஆப்டிக் இன்டர்நெட் கேபிள்கள் சேதம் காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இருந்தும் இதனால் பாரிஸ் நகரம் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விஷமிகளின் தீவைப்பு உள்ளிட்ட சதிவேலைகள் காரணமாக அதிவேக ரயில் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாதிக்கப்பட்டன. பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்பால் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

யூடியூபர் பிரியாணி மேன் கைதுக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

Youtuber Biriyani Man Arrested: பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு – மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்…

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு  பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்  பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து,  மீட்பு பணியில் 225 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் முக்கிய பாலமும் நிலச்சரிவில் சிக்சி உடைந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று இரவு … Read more

இரண்டு பேருக்குமே பாடி டிமாண்ட் அதிகம்… பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: திரைப்பட நடிகரும், சினிமா பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன், முன்னணி நடிகர் ஒருவர் குறித்தும், அவரின் வாரிசு குறித்து வெளிப்படையாக பேசிஉள்ளார். தாய் எட்டு அடி பாய்ந்தால்,குட்டி 16 பாயும் என்று சொல்வார்கள், அப்படித்தான் அந்த நடிகை திருமணம் தாண்டிய உறவில் வாழ்ந்து வருகிறார் என்று பேசி உள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.