மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமல்

புதுடெல்லி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. … Read more

என் கடைசி மூச்சு உள்ள வரை அவரை மறக்க மாட்டேன் – இந்திய வீரரை பாராட்டிய இர்பான் பதான்

மும்பை, ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. முதலாவது உலகக் கோப்பையை டோனி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை தற்போது இந்தியா வென்றுள்ளது. நீண்டகால உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்த இந்திய அணியினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்கள். அதன்படி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய … Read more

சுவிட்சர்லாந்தில் வெள்ளம், நில சரிவு: 4 பேர் பலி; 2 பேர் மாயம்

பெர்ன், சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பல இடங்களில் நில சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் வலாய்ஸ் கேன்டன் காவல் துறை வெளியிட்ட செய்தியில், பின் என்ற கிராமத்தில் 52 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிய வந்தது. இதுபற்றிய விசாரணையில், சாஸ்-கிரண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் … Read more

தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டு நலனுக்காக ஒன்றாக முன்னேறுவோம்

அனைவரையும் ஒன்றிணைத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பாடத்தை என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் – பின்னர் அரசியல் செய்யுங்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. கடந்த இரண்டு வருடங்களில் நாட்டை நேசிப்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அமைதியாக நாட்டிற்காக பரந்துபட்ட பணிகளை நிறைவேற்றினேன். புதிய அரசியல் பயணம் மாத்தறையில் ஆரம்பமானது. இந்தப் புதிய அரசியல் பயணத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல நாங்கள் உறுதிபூணுவோம். இன்று தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி … Read more

புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்: முதல் நாள் முதல் வழக்கு சாலையோர வியாபாரி மீது… விவரங்கள்!

இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களான பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் இன்று முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில், முதல் நாளே பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), 2023 இன் கீழ் முதல் எஃப்ஐஆர் (FIR) டெல்லியில் உள்ள கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. FIR இது குறித்து வெளியான தகவலின்படி, டெல்லி ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தைத் ஆக்கிரமித்து ஒருவர் விற்பனை … Read more

தமிழகத்தில் விக்கிரவாண்டி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமல்

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு முத்திரை விதிகள் படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்காகவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக்குழு கடந்த ஏப்.26ம் தேதி கூடி வகுத்து அளித்தது. இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் … Read more

“புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால்..” – ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: “புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம். ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை” என முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு … Read more

நைஜீரியாவில் தற்கொலைப் படை தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

மைடுகுரி: ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதக் குழுவின் பெண்கள் பிரிவு நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் வடக்கு பகுதியில் திருமண விழா, மருத்துவமனை மற்றும் துக்க வீடு என பல்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான குவோசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அடுத்த … Read more

தமிழக எல்லை கிராமத்தில் துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி….!

தமிழக எல்லை கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் போர் (வதம் செய்யும்  நிகழ்ச்சி ) கோலாகலமாக நடைபெற்றது.

அதிகரிக்கும் ரீசார்ஜ் கட்டணங்கள்… ஒரு வருடம் கவலை இல்லாமல் இருக்க ‘இந்த’ பிளான் உதவும்..!!

Tarrif Hike For Postpaid & Prepaid Plans: ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஜூலை 3 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. விலை உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும். தற்போது, ​​விலை அதிகரிக்கும் முன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மிச்சப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் ஏர்டெல்லின் சூப்பர் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில், ஒருமுறை … Read more