புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனை: உரிமையாளர்கள் எதிர்ப்பு; முதல்வரிடம் மனு அளிக்க முடிவு
புதுச்சேரி: புதுச்சேரி சாராயக்கடையில் தமிழக போலீஸார் சோதனையிட்டதற்கு சாராயக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று கூட்டம் நடத்தினர். பொய் வழக்கு போடுவதாக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளனர். கள்ளக்குறிச்சி எரிசாராயம் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக போலீஸார் புதுச்சேரி எல்லை பகுதிகளில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் தமிழக போலீஸார் நடத்திய வாகன சோதனையில், சாராய பாக்கெட்டுகள் கொண்டு சென்ற நபர் பிடிபட்டார். அதன் அடிப்படையில் தமிழக போலீஸார் தமிழக எல்லையிலுள்ள புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் … Read more