காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மூலம் அமர்நாத் யாத்திரையை தடுக்க பாக். முயற்சி
புதுடெல்லி: அமர்நாத் புனித யாத்திரையைத் தடுக்க காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மூலம் பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் மலைக்குகையில் ஆண்டுதோறும் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது. இதைக் காண்பதற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஷ்மீருக்கு வருகை தருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை 4 லட்சம் பக்தர்கள் கடந்த 28 நாட்களில் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த பனிலிங்கம் அமைந்துள்ளது. இந்த பனிலிங்க யாத்திரை, ராணுவப் … Read more