நலத்திட்ட பொருட்களுடன் மாணவர்களின் படங்கள் பதிவேற்றம்: கூடுதல் பணிச்சுமையால் ஆசிரியர்கள் அதிருப்தி
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவு நீக்கப்படாததால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசுஉதவி பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள், காலணிகள், மிதிவண்டிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2024-25) மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர நலத்திட்ட பொருட்களும் படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. … Read more