தென் மண்டலத்தில் சிறந்த 10 காவல் நிலையத்துக்கு கேடயம்: டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார்
சென்னை: தெற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் மாநில அளவிலும், மாநகர, மாவட்ட அளவிலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாநில அளவிலான சிறந்த 3 காவல் நிலையங்களுக்கு கடந்த குடியரசு தின கொண்டாட்டத்தின்போது, கேடயங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். … Read more