மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?

கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.   

797 ரூபாய்க்கு 300 நாள் ரீசார்ஜ் திட்டம்… அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்லின் மலிவு விலை திட்டம்!

தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியிருந்தாலும், பிஎஸ்என்எல்ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைவாகவே இருக்கிறது. மலிவான கட்டணத் திட்டங்களுக்கு பெயர் பெற்றது. குறைந்த விலையில் 300 நாட்களுக்கு முழு வேலிடிட்டியை வழங்கும் BSNL இன் அத்தகைய சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம். பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிஎஸ்என்எல் நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமாக இருப்பதால், தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களை விலையை அதிகரித்தாலும், BSNL அதன் மலிவான கட்டணத் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை. … Read more

சவுக்கு சங்கர் பேட்டி ஒளிபரப்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்க்கு ஜாமீன்

சென்னை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.   காவல்துறை அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து பிரனல யூ டியூபர் சவுக்கு சங்கர் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் … Read more

புரட்டிப்போட்ட நிலச்சரிவு.. வயநாட்டுக்கு யாரும் வராதீங்க.. கேரள முதல்வர் பினராயி விஜயன்!

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வயநாடு மாவட்டத்துக்கு மீட்புப் படையினரைத் தவிர வேறு யாரும் வர வேண்டாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் உள்ளிட்டோருடனான அவசர ஆலோசனையைத் தொடர்ந்து Source Link

நயன்தாரா முதல் அனுஷ்காவரை.. கோலிவுட்டில் மீண்டும் பக்தி சீசன்?

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா அடுத்ததாக அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அதேபோல் மாசாணி அம்மன் என்ற படத்தில் திரிஷா மற்றும் இன்னொரு தமிழ் படத்தில் அனுஷ்கா ஆகியோர் அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் மீண்டும் பக்தி சீசன் ஆரம்பித்துவிட்டதோ என்று கூறிவருகிறார்கள். தமிழ்

77 நகரங்களில் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ் ஆட்டோ

ஆகஸ்ட் 15 இல் 77 ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் அதே நாளில் நாட்டின் 77 நகரங்களில் உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் ஃப்ரீடம் 125 விற்பனைக்கு கிடைக்க துவங்கும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு டீலர்களுக்கு இந்த மாடலானது வர துவங்கியுள்ளதால் விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரீடம் சிஎன்ஜி டேங்க் பயன்படுத்தப்பட்டு … Read more

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம்

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தை மாற்றியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி முதல் காலை 10.00 மணிக்கு ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இதுவரை காலமும் இரவு 07.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

Wayanad: நிலச்சரிவால் நிலைகுலைந்த வயநாடு; நிவாரணப் பணிக்காகக் களத்தில் இறங்கும் மலையாள நடிகர்கள்!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் சூரல் மலை, மேப்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று இரண்டாம் நாளாக நடைபெற்று வருகின்றன. 4 குழுக்களாக 150 மீட்புப்படையினர் முண்டக்கை பகுதியில் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேரிடரில் சிக்கிய உயிரிழந்த 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளச் சூழலில் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. UPDATE : Day 2#WayanadLandslides … Read more

வயநாடு மீட்புப் பணி: 5 ஹிட்டாச்சி வாகனங்கள் உள்பட உபகரணங்களை அனுப்பிய கோவை மாநகராட்சி

கோவை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோவை மாநகராட்சி வயநாடு மீட்புப் பணிக்கு உபகரணங்களை அனுப்பியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீட்பு பணிக்கு பயன்படுத்துவதற்காக கோவை … Read more

கர்நாடகா திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

புதுடெல்லி/பெங்களூரு: காவிரி ஆற்றில் கர்நாடக அரசு திறந்துவிடும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 100-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில‌ அரசுகளின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள், வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். … Read more