புங்குடுதீவில் அட்டைப் பண்ணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

யாழ் புங்குடுதீவு பிரதேசத்தில் நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளது கருத்துக்கள் கேட்டறியப்பட்டு ஆராயப்பட்டது.

செயற்படுத்தலில் காணப்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்து பண்ணைகளை அமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏதுனிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.