`31 ஆண்டுகளாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ – முதியவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

மும்பையை சேர்ந்த 73 வயது முதியவர் மீது, 50 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதியவர் தன்னை 1987-ம் ஆண்டு 31 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 1987-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் முதியவரின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணுடன் முதியவர் கட்டாய உறவு வைத்துக்கொண்டதாகவும், அதன் பிறகு 2017-ம் ஆண்டு வரை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக முதியவர் வாக்குறுதி கொடுத்து பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி அப்பெண்ணை தனது இரண்டாவது மனைவி என்று தெரிவித்துள்ளார்.

அதோடு அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளவும் அனுமதிக்கவில்லை. அதேசமயம் 2017-ம் ஆண்டு அப்பெண்ணின் தாயாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு விடுமுறை எடுத்துள்ளார். விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த போது கம்பெனி மூடப்பட்டு இருந்தது. இதனால் முதியவரை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். ஆனால் முதியவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்தே முதியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கட்கரி, நீலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணைக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், முதியவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “31 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தாலும் 2018-ம் ஆண்டுதான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு காலதாமதமாக புகார் செய்வதற்கான காரணம் குறித்து விளக்கப்படவில்லை. இருவரும் 31 ஆண்டுகளாக மனமொத்துத்தான் உறவில் ஈடுபட்டுள்ளனர். இடைப்பட்ட காலத்தில் மனுதாரர் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால் இப்போது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர் திருமணமானவர் என்று மனுதாரருக்கு தெரிந்திருக்கிறது. அப்படி இருந்தும் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மனுதாரரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கவில்லை. மனுதாரர்தான் தன்னை குற்றவாளி தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறார். 31 ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுத்திருக்க முடியும். ஆனால் கொடுக்கவில்லை” என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் முதியவருக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.