கிளிநொச்சியில் தமிழ்மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் கடமைகள் தொடர்பான செயலமர்வு 

 
ஜனாதிபதி தேர்தலிற்கான தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. 
 
இதற்கமைய கிளிநொச்சி  மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்தும் நோக்கில் தமிழ் மொழிமூல அத்தாட்சிப்படுத்தும் உத்தியோகத்தர்களுக்கான அறிவூட்டல் தொடர்பான விசேட செயலமர்வு நேற்று
(20) நடைபெற்றது. 
 
குறித்த விசேட செயலமர்வு கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், பதில் அரசாங்க அதிபருமான எஸ்.முரளிதரன்  தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 
 
இதன்போது கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்  இத்தேர்தலுக்கான செயன் முறையிலான அறிவூட்டல்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.