நினைத்தேன் வந்தாய்: `சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலம்!'

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `நினைத்தேன் வந்தாய்’.

இந்தத் தொடரில் ஒடிசாவைச் சேர்ந்த ஜாஸ்மின் என்பவர் சுடர்விழி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்தத் தொடரிலிருந்து அவர் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாஸ்மின்

`நினைத்தேன் வந்தாய்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் முழு நேர கதாநாயகனாக என்ட்ரியானார் நடிகர் கணேஷ் வெங்கட்ராம். நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். கதைப்படி அவருடைய மனைவி இறந்து விட அவரது குழந்தைகளை பாதுகாப்பதற்கான சுடர்விழியை வரவழைக்கிறார்கள். தாய் பாசத்திற்காக ஏங்கும் குழந்தைகள், தன் குழந்தைகளுக்காக எழில் சுடரை மணந்து கொள்வாரா என்பதை நோக்கித்தான் கதை நகர்கிறது. 

ஜாஸ்மினுக்குப் பதிலாக தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பரிச்சயமான அபிராமி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `வீரா’ தொடரில் அபிராமி கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அபிராமி

விரைவிலேயே இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. வாழ்த்துகள் அபிராமி! 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.