ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வந்தன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பித்தாக கூறப்பட்டது. இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவராக ஜெய்ஷா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், புதிய ஐசிசி தலைவர் ஜெய்ஷாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஐசிசியின் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசொல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். பிசிசிஐயைப் போலவே உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசியின் வளர்ச்சிக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.