சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது

புத்தளம் கரம்பை பிரதேச வீதித்தடையில் நேற்று (27) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தியில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ​​சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அங்கு, அந்த வண்டியில் சுங்க சட்டத்தை மீறி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் குறித்த வண்டி என்பன கையகப்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்பதுடன், குறித்த சந்தேகநபர், 650 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கெப் வண்டி (01) ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெரைச்சோலை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.