சென்னை பிராட்வேயில் ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் – தமிழக அரசு நிர்வாக அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் குறளகத்தை உள்ளடக்கிய, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து வளாகத்தை ரூ.822.70 கோடியில் அமைக்க தமிழக அரசு நிர்வாக அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியால் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் தங்க சாலை பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 1960-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பிராட்வே பேருந்து நிலையமானது வெளியூர் செல்லும் … Read more

“பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது” – வெளியுறவு அமைச்சர் திட்டவட்டம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ‘மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்’ என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர், “பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை, … Read more

காவல்துறையினர் சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி

சென்னை காவல்துறையினர் சென்னை நகரில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ளனர். வருகிற 7-ந்தேதி நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை  கொண்டாடப்படுகிறது. சென்னை நகரில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளது. எனவே பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர், சென்னையில் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு … Read more

Yuvan Shankar Raja: ஏ.ஆர். ரஹ்மானை விஞ்ச வேண்டும்! வைராக்கியத்தில் வளர்ந்த யுவன் சங்கர் ராஜாவின் கதை

சென்னை: யுவன் ட்ரக்ஸ், கிங் ஆஃப் பிஜிஎம் என இன்றைக்கும் கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது, 45வது பிறந்த நாளைக் (HBD Yuvan Shankar Raja) கொண்டாடுகின்றார். தனது இசையால் பலரையும் தனது, ரசிகர்கள் பட்டாளத்தில் கட்டுக் கொண்டுள்ளார். தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் இல்லாமல்,

Wayanad `அந்த நொடியை இப்போ நெனச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது' – ஒரு மாதம் கடந்தும் ரணம் ஆறாத வயநாடு

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருமாதம் நிறைவடைந்திருக்கிறது. 400-க்கும் அதிகமானோர் கொடூரமாக உயிரிழந்த அந்த கோர பேரிடரில் காணாமல் போனவர்களை கண்டறியும் பணிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் இருந்து அழுகிய உடல் பாகங்களை இன்றளவும் மீட்டு வருகின்றனர்‌. மீடகப்படும் உடல் பாகங்களை அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பி, மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் ‌. வயநாடு நிலச்சரிவு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிவாரணத்தொகை … Read more

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஊழியர் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகம் விரைவு சாலையில் டாக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சோடா ஆஷ் மற்றும் அமோனியம் குளோரேட் உரம் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ஜோயல் என்பவரிடம் மெக்கானிக்காக ஏரல் அருகே மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் ஹரிஹரன் (23), தூத்துக்குடி காட்டன் சாலையைச் சேர்ந்த … Read more

அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கான தொழுகை நேரம் ரத்து: ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்பு

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் பல ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை தொழுகை நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் சட்டப்பேரவை விதிகள் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அசாம் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது முதல், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்கு செல்வதற்காக பேரவை அமர்வு காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவது வழக்கம். அவர்கள் தொழுகை முடித்து வந்தபிறகு மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் அவை தொடங்கும். மற்ற நாட்களில் இதுபோன்ற … Read more

சாம்பாய் சோரனுக்கு பதில் அமைச்சரான ராம்தாஸ் சோரன்

ராஞ்சி ஜார்க்கண்ட் அமைச்சர் பதவியில் இருந்து சாம்பாய் சோரன் விலகியதால் ராம்தாஸ் சோரன் அமைச்சராகி உள்ளார். முன்பு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது அம்மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் சம்பாய் சோரன், சுமார் 5 மாதங்கள் முதல்வர் பதவியில் இருந்தார். ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தபோது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் தெரிவித்திருந்தார். … Read more

காதல் முறிவால் கலங்கவில்லை.. ரூட்டை மாற்றிய ஸ்ருதிஹாசன்.. பிரபாஸ், லோகேஷ், ரஜினிகாந்த்.. வேறலெவல்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ‘லக்’ படத்தின் மூலம் ஹீரோயினாக இந்தியில் அறிமுகமானாலும் அவருக்கு அங்கே பெரிதாக லக் அடிக்கவில்லை. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 7ஆம் அறிவு படத்தில் அறிமுகமானார். தனுஷ் உடன் ‘3′, விஷாலின் பூஜை, விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், மீண்டும் சூர்யாவுடன் இணைந்து சிங்கம்

Jasprit Bumrah: `நீங்கள் பந்துவீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்?' – சென்னையில் மனம் திறந்த பும்ரா!

கிரிக்கெட் உலகில் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த பவுலராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலம்வருகிறார். குறிப்பாக இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் பேட்ஸ்மேன் துதிபாடலில் இன்று விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு நடுவே தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உச்சி முகரப்படுகிறார் பும்ரா. கடந்த 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பைத் தொடரில் பும்ராவுக்கு எதிராக ரன் அடிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்று பிற நாடுகளின் சிறந்த … Read more