புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு: வீட்டு உபயோக மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பால் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இது இந்த நிதியாண்டில் நடைமுறையில் இருக்கும். விவசாய மின்சாரம் இலவசமாக தொடரும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2024-25 ஆம் ஆண்டுக்கான மின் கட்டண உத்தரவை 12.06.2024 அன்று வெளியிட்டது. புதிய கட்டண விகிதங்கள் 16.06.2024 முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.