விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம்

விவசாயிகளின் பொருளாதார பலத்தை அதிகரித்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் விவசாயிகள் பெற்றுக் கொண்ட செலுத்தப்படாத விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதேஇந்த யோசனையை முன்வைத்துள்ளதுடன், இந்த பிரேரணை எதிர்வரும் காலங்களில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர்; தெரிவித்துள்ளார்.

2022 இல் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த நாட்டின் விவசாயிகள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.