Rajini: ஹேமா கமிட்டி விவகாரத்தில் ரஜினி மௌனமா? பெண்களின் பாதுகாப்பிற்குத் துணை நிற்கக் கோரும் ராதிகா

மலையாளத் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, “பெண்கள் எல்லாரும் பிறவியிலேயே பலமானவங்க. எங்களைப் பின்னாடி தள்ளிட்டாங்க இன்னவரைக்கும் நாங்க போராடிட்டே இருக்கிறோம். நிறைய ஆண்கள் தப்பு பண்ணிருக்காங்க. ஆனா இந்த ஆண்களைத்தான் இந்த சொசைட்டி மேல தூக்கி வைச்சி கொண்டாடுது. இந்த மாதிரி ஒவ்வொரு ஹீரோயின்ஸ்க்கும் ஒவ்வொரு கதை இருக்கு. ரஜினி உங்களுடைய மொளனம் தவறாகப் புரிந்து கொள்ளப்படும். இதுக்கு எதுக்குப் பதில் சொல்லணும், சொன்னா என்ன பதில் சொல்லணும்னு நினைச்சி பேசாம இருக்க வேண்டாம். நான் இந்த பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிறதுக்காக எல்லாரோடையும் உட்கார்ந்து சரியாகச் செயல்படுவேன்னு சொன்னாப்போதும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உண்மையாகவே ரொம்ப சந்தோசமாக இருக்கும்.” என்று பேசியுள்ளார். இவ்வாறு பல கேள்விகளை எழுப்பிய ராதிகா சரத்குமாரின் முழு வீடியோவைக் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.