வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு

வியட்னாம் சோஷலிச ஜனநாயக குடியரசின் 79ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் தூதரகத்தினரால் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் வியட்நாம் தூதுவர் Trinh Thi Tam தலைமையில் 29 அன்று கொண்டாடப்பட்டப்பட்டது

இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

கடற்றொழில் அமைச்சர் இலங்கை மற்றும் வியட்னாம் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் பொருளாதார தொடர்புகள் தொடர்பாக அரசாங்கத்தின் விஷேட செய்தியை இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை வியட்நாம் ஒற்றுமை சங்கத்தின் செயலாளர் நாயகம் சுதசிங்க சுகதபால, கொழும்பு பொது நூலகத்தின் பிரதம நூலகர் வருணி ககபதாராச்சி, இராஜதந்திரிகள் உட்பட மத தலைவர்கள், வியட்நாம் சமூகம் மற்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.