முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு இந்திய துணைத்தூதுவர் வியஜம் – அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்  சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  திரு.அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள்  தொடர்பாக கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கான  இந்திய துணைத்தூதுவர்   நேற்றைய தினம் (05)  முல்லைத்தீவு  மாவட்ட  செயலகத்துக்கு உத்தியோகபூர்வ வியஜம் மேற்கொண்ட போதே இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இதே வேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு அபிவிருத்தித் தேவைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு  மாவட்ட அரசாங்க அதிபரினால் யாழ்ப்பாணத்திற்கான  இந்தியத் துணைத்தூதுவரிற்கு  விபரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், யாழ். இந்திய துணைதூதரகத்தின் இணைப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.