‘மின் உயர்விலிருந்து 2026 இல் காப்பாற்றப்படுவீர்கள்’ – விநாயகர் சதுர்த்தி விழாவில் காங்., ஆதரவாளர்கள் நூதனம்

புதுச்சேரி: புதுச்சேரி மின் உயர்விலிருந்து 2026 இல் காப்பாற்றப்படுவீர்கள் என அறிவிப்பை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை காங்கிரஸ் ஆதரவாளர்கள் நூதனமாக கொண்டாடினர்‌.

புதுச்சேரியில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தியால்பேட்டை பகுதியில் பெரிய அளவில் விநாயகர் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் சார்பில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் நூதனமாக விநாயகர் அருள் பாதிக்கும் கையில் மின் கட்டண உயர்வை சுட்டிக்காட்டி அறிவிப்பு வைத்திருந்தனர்.

அதில் “பக்தர்களே கவலை வேண்டாம்- மின்சார கட்டண உயர்வில் இருந்தும் மின்துறை தனியார் மையம் ஆவதிலிருந்தும் காப்பாற்றப்படுவீர்கள். 2026 விரைவில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் -பாஜக ஆட்சியில் மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. அத்துடன் மின்துறையும் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை சுட்டிக்காட்டி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை நூதன முறையில் கொண்டாடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.