தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : 11ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான வழிகாட்டல் வகுப்புகள் 2024 செப்டம்பர் 11ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை முடியும் வரை நடாத்துவதற்குத் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறே பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டி, துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்றவை அல்லது அவற்றை வைத்திருத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.