ரூ.3 லட்சம் தள்ளுபடியை எலெக்ட்ரிக் கார்களுக்கு அறிவித்த டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக உள்ள நிலையிலும் ரூபாய் 3 லட்சம் வரை பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையே Festival of Cars என்ற பெயரில் அறிவித்துள்ளது. முன்பாக பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களுக்கு 2.05 லட்சம் வரை சலுகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் அக்டோபர் 31, 2024 வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • டியாகோ.இவி ஆரம்ப விலை ₹ 7.99 லட்சம்
  • பஞ்ச்.இவி ஆரம்ப விலை ₹ 9.99 லட்சம்
  • நெக்ஸான்.இவி ஆரம்ப விலை ₹ 12.49 லட்சம்

விலை சலுகை மட்டுமல்ல புதிதாக வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 6 மாதங்களுக்கு டாடா பவர் சார்ஜிங் நிலையங்களில் சார்ஜ் செய்ய முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவதாகவும் இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டபடுகின்றது.

குறிப்பாக டாடாவின் நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலுக்கு அதிகபட்சமாக ரூபாய் 3.00 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது அடுத்தபடியாக பஞ்ச்.இவி மாடலுக்கு ரூபாய் 1.20 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.40,000 வரை டாடா டியாகோ.இவி விலை ரூ.40,000 வரை குறைக்கபட்டுள்ள நிலையில் ஆரம்ப நிலை வேரியண்டில் எந்த மாற்றமும் இல்லை.

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் அனைத்தும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. டீலர்களை பொறுத்து இந்த சலுகைகள் மாறுபடும் மேலதிக விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலர்களை அணுகுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.