`வங்கி அதிகாரியைக் கரம்பிடித்தார்!' – யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன்

யாத்திசைத் திரைப்பட இயக்குநர் தரணி ராசேந்திரனுக்கு வங்கி அதிகாரியான சிவரஞ்சினி என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது.

தரணி ராசேந்திரன்:

பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் சினிமா மீதான ஆர்வம் காரணமாகக் குறும்படங்கள் எடுக்கத் தொடங்கியவர். முதன் முதலாக ஞானச் செருக்கு என்ற திரைப்படத்தை எடுத்தார்.

ஓவியரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றது.

அதன் பிறகு யாத்திசை பட வாய்ப்பு கிடைத்து, திரையரங்கில் வெளியானதால் அது முதல் படமாக அமைந்தது.

திரைப்படம் மட்டுமல்லாமல் எழுத்துலகிலும் செயல்பட்டு வருகிறார் தரணி ராசேந்திரன்.  ‘லிபரேட்கள்’, ‘சாண்ட்விட்ச்’, ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’, ‘கடவுளைத் தரிசித்த கதைகள்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

திருமணம்

தரணி ராசேந்திரனுக்கு இன்று (15.09.2024) விழுப்புரத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரி, ரா.சிவரஞ்சினி என்பவருடன் ஈ.சி.ஆரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வாழ்த்துகள் தரணி ராசேந்திரன் – சிவரஞ்சனி

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.