Eruma Saani Vijay: `கர்ப்பமாக இருக்கேன்னு ப்ராங்க் பண்றானு நினைச்சேன்’ – விஜய், நக்‌ஷத்ரா ஷேரிங்ஸ்

யூட்யூப் ஸ்கிட் வீடியோ என்ற ஒன்றை தமிழில் நமக்கு பிரபலப்படுத்தியதில் ‘எருமை சாணி’ சேனல் விஜய் குமாருக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.

தற்போது இவரும் இவருடைய மனைவி நக்‌ஷத்ராவும் இணைந்து ‘ஹை ஆன் காதல்’ என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்கள். இந்த சீரிஸ் ஆஹா ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த சீரிஸுக்காக இவர்கள் இருவரையும் சந்தித்துப் பேசினோம்.

High On Kadhal Series

இந்த தம்பதி கூடிய விரைவில் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளனர். கூடுதல் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்த விஜய், “பொறுப்பாக வாழ்க்கையை நகர்த்தி கொண்டுப் போறேன். அடுத்து குழந்தை வரப்போகுது. இன்னும் பொறுப்பாகவே நகர்த்தணும்னு ஆசைப்படுறேன்!” என பேச தொடங்கினார்.

“எங்களுடைய இந்த ‘ஹை ஆன் காதல் (High on kadhal) வெப் சீரிஸ் ரொம்பவே நல்லா வந்திருக்கு. ஒரு மாநகரத்துல தனியாக வீடு எடுத்து இருக்கிற கணவன், மனைவியை பற்றியதுதான் கதை. இந்த கதை பலருக்கும் கனெக்ட்டாகும். சொல்லப்போனா, நானும் என் மனைவி நக்‌ஷத்ராவும் இந்த சீரிஸ்ல நடிக்கல. சேர்ந்து வாழ்ந்தோம். முதல்ல இந்த சீரிஸ்ல நானும் என் மனைவியும் சேர்ந்து பண்ணினால் நல்லா இருக்கும்னு இயக்குநர் சொன்னாரு. அவர் சொன்ன விஷயத்தை நான் நக்ஷத்ராகிட்டவும் சொன்னேன்.

High On Kadhal Series

அவளும் ஹோப்பி! அப்புறம்தான் இந்த சீரிஸ் உருவாகுச்சு. இதுக்கு முன்னாடி நக்‌ஷத்ரா சீரிஸ் பண்ணியிருந்தாலும் பெரிய ஸ்கேல்ல இதுதான் முதல் முறை. அதுக்கேத்த மாதிரி பொறுமையாக பண்ணலாம்னு திட்டமிட்டோம். ஆனா, நக்‌ஷத்ரா என்னையவே ஓவர் டேக் பண்ணிட்டு போயிட்டா…” என்றதும் நக்‌ஷத்ரா பேச தொடங்கினார். அவர், ” முதல்ல பயம்லாம் நிறையாவே இருந்துச்சு. அந்த சமயத்துல, விஜய்கூட இருந்தது எனக்கு கம்ஃபோர்ட்டாக இருந்தது.” என்றார்.

“நான் யூட்யூப்ல இருந்ததுனால. மக்களுக்கு என்னென்ன விஷயங்களை பிடிக்கும்ங்கிற தெரிஞ்சு வச்சுகிட்டு கதைகள் பண்றேன். இப்போ மக்கள் தங்களோட தினசரி வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக்கிற மாதிரியான விஷயங்கள் இருந்தால் நிச்சயம் அவங்களுக்கு பிடிக்கும். அப்படியான விஷயங்கள் இந்த சீரிஸ்ல இருக்கு. இந்த சீரிஸ் பார்த்தவங்களும் ‘இந்த மாதிரியான கதாபாத்திரத்தை என் லைஃப்ல பார்த்திருக்கேன்’னு சொன்னாங்க. இந்த சீரிஸ்ல மொத்தம் நான்கு எபிசோடுகள் இருக்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு எமோஷன் சார்ந்து இருக்கும். ” என்றார்.

Vijay Kumar Rajendran

இதை தொடர்ந்து நக்‌ஷத்ராவிடம் விஜய்யின் நடிப்பு பற்றி கேட்டதற்கு, ” முதல்ல இவரோட காமெடி விஷயங்களை ரொம்பவே ரசிச்சேன். அதுக்குப் பிறகு ‘நட்பே துணை’ படத்துல இவரோட எமோஷனல் சைடு பார்த்தேன். இப்போ இந்த சீரிஸ்ல விஜய்யோட லவ் பக்கத்தை பார்த்துட்டேன். அதே மாதிரி கொஞ்சம் அமைதியாகவும் நடிச்சிருக்காரு இந்த சீரிஸ்ல. இவரை நடிகராக நான் ரசிச்சிருந்தாலும் எனக்கு இவரை இயக்குநராக ரொம்ப பிடிக்கும்.” எனக் கூறினார்.

யூட்யூப் டு சினிமா பயணத்தை விவரிக்க தொடங்கிய விஜய். “நான் ரொம்ப சீக்கிரமாகவே யூட்யூப் சேனலை தொடங்கிட்டேன். அப்போ நான் பண்ணின மாதிரியான வீடியோஸ் பண்றவங்க ரொம்பவே குறைவுதான். ஆனா இன்னைக்கு அப்படி இல்ல. நிறைய சேனல் வந்திருச்சு. அப்போ நாங்க சினிமாங்கிற நோக்கத்தோட யூட்யூப்ல இருந்தோம். ஆனா இன்னைக்கு யூட்யூப்லையே இருக்கணும். அதுல வளர்ச்சியை பார்க்கணும்னுதான் நினைக்கிறாங்க. இப்போ என்கிட்ட பலர் vlogs பண்ண சொல்றாங்க. இப்போ நான் யூட்யூப்ல ஒரு கன்டன்ட் பண்றேன். அதைதான் அப்படியே சினிமாவாக பண்ணப்போறோம். சொல்லப்போனால், இந்த மாதிரியான வீடியோஸ் பண்றதுல நிறைய விஷயங்கள் கத்துக்கலாம். ஆனா Vlogs ல அப்படி எதுவும் கத்துக்க முடியாது.

Vijay Kumar Rajendran

இப்போ நீங்க சினிமாவுக்கு போகணும்னு ஒரு எண்ணம் வச்சிருந்தீங்கனா அதுக்கு யூட்யூப் ஒரு பேட் ஐடியாதான். அதுக்கு பதிலாக குறும்படங்கள், வெப் சீரிஸ்னு பண்ணுங்க!” என்றவர் சமீபத்தில் தனது சொந்த ஊரில் புதிதாக சொந்த வீடு ஒன்றையும் கட்டியிருந்தார். இது தொடர்பாக நெகிச்சியான பதிவு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அது குறித்து அவர், “சின்ன வயசுல இருந்தே அது ஒரு கனவு. சொந்தமாக ஒரு வீடு கட்டணும்னு. அந்த கனவை இப்போ சாத்தியப்படுத்தியிருக்கோம். எங்க வீட்டு கிட்ட சிலர் வந்து ‘இதுதான் ‘எருமை சாணி’ விஜய் வீடு’னு பேசிக்கிறாங்கனு அம்மா சொன்னாங்க. இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களெல்லாம் எனக்கு பெருமையாகதான் இருக்கு. ” என்றார் விஜய்.

மற்றதைவிடவும் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த தம்பதி தங்களின் குடும்பத்திற்குள் ஒரு புதிய வரவை வரவேற்கவிருக்கிறார்கள்.

Nakshthra

இது தொடர்பாக விஜய், ” முதல்ல கர்ப்பமாக இருக்கேன்னு ப்ராங்க் பண்றானு நினைச்சேன். ஏன்னா, நக்‌ஷத்ரா ரொம்ப ப்ராங்க் பண்ணுவா. அதுனால இதுவும் ப்ராங்னுதான் நினைச்சேன். அப்புறம் டெஸ்ட் பண்ணினதை காமிச்சதும்தான் நம்பினேன்.” என்றவர் தன்னுடைய அடுத்தடுத்த லைன் அப்கள் குறித்து விவரிக்க தொடங்கினார். ” இப்போ ஹாட்ஸ்டாருக்கு 100 எபிசோடுகள் டைரக்ட் பண்றேன். அதுக்குப் பிறகு டிசம்பர்ல நான் டைரக்ட் பண்ற அடுத்தப் படம் ஆரம்பிக்குது. நடிக்கிறதுக்கான பேச்சு வார்த்தைகள் போயிட்டுதான் இருக்கு. உறுதியானதும் சொல்றேன்….!” என முடித்துக் கொண்டார்.

முழுப் பேட்டியைக் காண…

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.