விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
த.செ.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தின் பணிகளை முடித்த கையோடு, ‘கூலி’ படத்தின் படப்படப்பில் மும்முரமாகியிருக்கிறார் ரஜினி. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கிய லோகேஷின் அடுத்த படம் என்பதாலும், ‘ஜெயிலர்’ படத்தில் வசூலைக் குவித்த ரஜினியின் திரைப்படம் என்பதாலும் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.

இப்படத்தில் ரஜினியுடன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்கிறார். இருவருக்குமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் அனுமதியின்றி எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.
இது ‘கூலி’ படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “எங்கள் படக்குழுவினர் பலரும் கடுமையாக உழைத்து இரண்டு மாதங்களாக எடுத்தக் காட்சியை ஒரு வீடியோ மூலம் கசியவிட்டு வீணாக கெடுக்கிறார்கள்.
Two months of hard work by many people have gone in vain because of one recording.
I humbly request everyone not to engage in such practices, as they spoil the overall experience. Thank you.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2024
இதுபோன்ற விஷயங்களை தயவு செய்து யாரும் பார்க்கவும், ஆதரவு தரவும் வேண்டும் என்பதை தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்” என்று வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…