Tirupati Laddu: திருப்பதி லட்டில் மீன் எண்ணெய்,விலங்குக் கொழுப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இதில் திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக நேற்று நடந்த என்.டி.ஏ சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் (ஒய்.எஸ்.ஆர்) இருந்தபோது திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர் என்றும் புனிதமான திருமலை லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியும் மாசுபடுத்தியுள்ளனர் என்றும் பரபரக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு

இது ஆந்திர அரசியலில் தீயாகப் பற்றிய எரிய, தங்கள் மீதான குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தனர் ஒய்.எஸ்.ஆர் கட்சியினர். மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான ஒய்.வி சுப்பா ரெட்டி, “நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து சர்வ வல்லவரான அந்த ஏழுமலையான் முன் சத்தியம் செய்யத் தயாராக உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்ப, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது குறித்து ‘தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம்’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்த ஆய்வில் மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி எண்ணெய், விலங்குக் கொழுப்பு உள்ளிட்டவை திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.