சனாதிபதித் தேர்தலில் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் நடைவடிக்கைகள் நிறைவு

நாளை (21.09.2024) நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் இதர ஆவணங்களை, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யில் வைத்து சம்பந்தப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (20.09.2024) நண்பகல் 12.30 மணியளவில் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறியத்தந்துள்ளார்.

இக் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.