சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவி்ட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர் கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஏற்கெனவே உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் அந்த பரிந்துரையை ஏற்று 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவி்ட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.