Kolangal: "இத்தனை வயசுக்கு மேல கல்யாணமான்னு கேட்கலாம். ஆனா…" – மனம் திறக்கும் 'தில்லா' சுப்பிரமணி

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நெடுந்தொடர் `கோலங்கள்’. இப்போதும் பலர் கோலங்கள் பார்ட் 2 எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள். `தோழர் – தில்லா’ இந்தத் தொடரின் ஹிட் காம்போ. அவர்களைப் பிரத்யேகமாக நமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். 

தில்லா

தோழராக நடித்திருந்த எல்.வி. ஆதவன் பலருக்கும் பரிச்சயமானவர். மெகா டிவியில் இன்றும் `அமுதகானம்’ நிகழ்ச்சியை ஆத்மார்த்தமாய் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் குறித்த தகவல்கள் நமக்குத் தெரியும் என்பதால் தில்லாவாக நடித்திருந்த சுப்பிரமணியிடம் அவருடைய பர்சனல் லைஃப் குறித்துக் கேட்டோம்.

“என்னோட சொந்த ஊர் கோவில்பட்டி. எம்.எஸ்.சி கணிதம் முடிச்சிருந்தேன். அப்ப தான் கம்ப்யூட்டர் அறிமுகமாச்சு. அது சார்ந்த கோர்ஸ் படிச்சிட்டு வக்கீலுக்குப் படிக்கப் போனேன். அப்ப ராம்கோ சிமெண்ட் கம்பெனியில் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை இருக்குன்னு என்னை கட்டாயப்படுத்தி வேலையில் சேர்த்து விட்டுட்டாங்க. எனக்கு பப்ளிக் சர்வீஸ்ல ரொம்பவே ஆர்வம். வேலை முடிஞ்சதும் நேரா ஒரு கிராமத்துக்குள்ள நுழைஞ்சிடுவேன். ஒவ்வொரு வீட்டுக்கு போய் என்னை அறிமுகப்படுத்திட்டு அவங்க பிரச்னைகள் குறித்துக் கேட்பேன். என் சம்பளத்துல அவங்களுக்கு உதவி பண்ணுவேன். அப்போலாம் டிபி, போலியோ அதிகமா இருந்துச்சு. எல்லாருக்கும் உதவி பண்ணிட்டிருந்தேன்.

அது ஒவ்வொருத்தருக்கும் தெரிய ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரா என் கூட சேர்ந்தாங்க. ராம்கோவுடைய சேர்மேன் என்னைக் கூப்பிட்டு, `நீ ஏன்பா தனியா பண்ற? நாம எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம்’னு சொல்லி `ராம்கோ சோசியல் சர்வீஸ் லீக்’னு ஆரம்பிச்சோம். இன்னைக்கு அது மிகப்பெரிய துறையா வளர்ந்துருக்கு. தொடர்ந்து 33 வருஷமா அந்த அமைப்பு மூலமா உதவிகள் பண்ணிட்டு வர்றாங்க. அது எனக்கு மிகப்பெரிய மனநிறைவைக் கொடுத்துச்சு.

தில்லா

அப்ப தான் திருச்செல்வம் சார் மூலமா கோலங்கள் வாய்ப்பு கிடைச்சது. சர்வீஸை எடுத்துப் பண்றதுக்கு ஆள் இருந்தாங்க. அதனால சீரியல் நடிச்சேன். இப்படித்தான் என் டிராவல் இருந்தது!” என்றவரிடம் குடும்பம் குறித்துக் கேட்டோம்.

“சர்வீஸ் மனநிலையில் இருந்ததால கல்யாணம் பண்ணிக்கல. 24 வயசுலேயே பேச்சுலர் ஆகவே இருக்கணும்னு முடிவெடுத்துட்டேன். இப்ப இந்த வயசுல ஃபேமிலியாகப் போறேன். பலர் இந்த வயசுல கல்யாணமெல்லாம் தேவையானு கேட்பாங்க தான். ஆனா, அதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல” என்றார்.

தில்லா

தில்லாவாகப் பரிச்சயமான சுப்பிரமணி அவர் குறித்து பல விஷயங்களை முதன் முறையாக வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.