இந்திய விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் நியமனம்

புதுடெல்லி: இந்திய விமானப்படை தளபதியாக உள்ள விவேக் ராம் சவுத்ரி வரும் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் பிரீத்சிங் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் சீப் மார்ஷலாக பதவி உயர்வு பெறும் இவர்,வரும் 30-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1964-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிறந்த அமர் பிரீத் சிங், கடந்த 1984-ம்ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் சேர்ந்தார். கடந்த 40 ஆண்டுகளில் போர் விமான கமாண்டர், மிக்-27 படைப்பிரிவின் கமாண்டிங் ஆபிசர், விமானப்படை தளத்தின் ஏர் ஆபிசர் கமாண்டிங் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி விமா னப் படையின் 47வது துணைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

5,000 மணி நேர அனுபவம்: நேஷனல் டிபன்ஸ் அகாடமி, டிபன்ஸ் சர்வீசஸ் ஸ்டாப் காலேஜ், நேஷனல் டிபன்ஸ் காலேஜ், ஏர் போர்ஸ் அகாடமி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இவர், மிகவும் அனுபவம் வாய்ந்த போர் விமானி ஆவார். ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் மணி நேரத்துக்கு மேல் விமானம் ஓட்டி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.