“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக தமிழகத்தில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்” – தயாநிதி மாறன்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை அன்னபூர்ணா சீனிவாசன், ‘ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக நிர்ணயித்து நடைமுறையை எளிமையாக்குங்கள்’ என்று தான் சொன்னார்.

தயாநிதி மாறன்

அதற்காக அவரை மிரட்டுவது எந்த வகையில் நியாயம். இது கோவை மக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்புணர்ச்சியை காட்டுகிறது.

தற்போது தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.25 லட்சமாகிவிட்டது. இதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம். மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் எல்லாரும் நீட் தேர்வு எழுதியவர்களா.

நீட் தேர்வு

இப்போது உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வை எழுதாதவர்கள் தான். குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே மருத்துவம் படிக்க வேண்டும் என்றும், மற்ற சாதியினர் மருத்துவம் படிக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாட்டில் மூன்று மாதங்கள் டேரா போட்டவர் நிர்மலா சீதாராமன். எப்படியாவது அடிமைகளின் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என நினைத்தார்  அப்போது அவர், ‘இந்தாண்டு நீட் இருக்காது.’ என கூறினார்.

நிர்மலா சீதாராமன்

முதலமைச்சர் கனவு இருக்கும்போது ஒரு மாதிரி பேசினார். ஆனால் அந்த கனவு  நிறைவேறவில்லை. அதனால் தற்போது அவர் வேறு மாதிரி பேசுகிறார்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.