“சுந்தர்.சி அண்ணாவை ஹீரோவா வச்சு படம் பண்ணனும்னு ஆசை" – ஹிப் ஹாப் தமிழா ஆதி

ஹிப்ஹாப் தமிழா ஆதி சமீபத்தில் வெளியான கடைசி உலக போர் திரைப்படத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்

உங்களோட படங்களிலே கடைசி உலகப்போர் திரைப்படம் ஒரு புதிய முயற்சியா இருக்கு. அதைப்பத்தி சொல்லுங்க? 

” இது  புரோடியூசரா நாங்க பசங்கலாம் ஒண்ணா சேர்ந்து நம்ம இதை முயற்சி பண்ணுவோம், முடியாதுங்கிறதை முடிச்சிக்காட்டும் போது ஒரு சந்தோசம் வருதுல அது ஒரு தனி சந்தோசம்னு பண்ணினோம். இந்த மாதிரி படம் பண்றதுக்கு இப்போ எல்லாரும் ரெடியா இருக்காங்க. எனக்கு வித்தியாசமா வேறவேற மாதிரி நிறைய பண்றதுக்கு ஆசை. இதுக்கு அப்புறமும் இது மாதிரி இல்லாம வேற ஒரு மாதிரியான படமாகத் தான் பண்ணுவேன். “

இந்த மாதிரியான ஒரு படத்துல தான் உங்களோட மொத்த பணத்தையும் முதலீடு பண்ணனும்னு ஐடியா வந்தது எப்படி? 

” மனிதம் தான் எல்லாத்தை விடவும் பெரிசுங்கிறதை எனக்கு சொல்லனும்னு ஆசை. மதம், இனம், மொழி, நாடுன்னு எல்லாத்தையும் தாண்டி மனிதனாய் இருக்கிறது தான் முக்கியம்கிறதை சொல்லணும். அதுக்கு ஒரு பேரிடரா உலகப்போருங்கிறதை வச்சிக்கிட்டு அது சென்னைக்குள்ள நடக்குறதா நம்ம ஊர்ல என்ன நடக்குதுங்கிறதை அரசியல் ரீதியாவும் சரியா இருக்கணும்னு நினைச்சோம் அது மொத்ததோட வெளிப்பாடு தான் இந்தப் படம்.”

இவ்வாறு படம் பற்றிய பல்வேறு அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஹிப்ஹாப் ஆதி. அவற்றை முழுமையாக காண லிங்கை க்ளிக் செய்யவும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.