செங்டு ஓபன் டென்னிஸ்; யூகி பாம்ப்ரி இணை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பீஜிங்,

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரப்லேல் மாடோஸ்-குரோசியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி-ஒலிவெட்டி ஜோடி 6-3, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் மாடோஸ்- இவான் டோடிக் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பாம்ரி ஜோடி, பிரான்சின் சாடியோ டொம்பியா – பேபியன் ரிபோல் ஜோடியை எதிர்கொள்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.