தேனி நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை? – புகாரும் விசாரணையில் நீடிக்கும் குழப்பமும்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவி, நேற்று காலை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தான் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

அந்த புகாரில், `தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவியான நான், நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் என்னை காரில் கடத்தி திண்டுக்கல்லுக்கு வந்தனர். வரும் வழிகளில் அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்தது. திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்ததும் அந்த கும்பல் என்னை இறக்கி விட்டு தப்பியது.

இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்’ என இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ. வனிதா தலைமையிலான போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்த மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் மாணவியிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

தொடர்ந்து மாணவி கூறிய விஷயங்களை நேரில் சென்று அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் மாணவி கூறியது போன்ற நிகழ்வுகள் இல்லை. தேனி மாவட்ட போலீஸாரை தொடர்பு கொண்ட திண்டுக்கல் போலீஸார் தேனி பஸ் ஸ்டாண்டில் மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தினர். தேனி போலீஸார் அங்கிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதிலும் மாணவி கூறியது போல எதுவும் நடக்கவில்லை.

இதனால் குழப்பமடைந்த தேனி போலீஸார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் மீண்டும் விசாரணையை துவக்கினர். மதியம் 1:00 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 8:00 மணி வரை நீடித்தது. 8 மணி நேரம் விசாரணைக்கு பின்னும் முழுமையான தகவல்கள் கிடைக்காததால் போலீஸார் திணறினர். மாணவி தொடர்ச்சியாக முன்னுக்கு பின் முரணாகவே தகவல்களை அளித்து கொண்டிருந்ததால் அங்கிருந்து கிளம்பினர்.

பாலியல் துன்புறுத்தல்

முடிவில் மாணவி கூறிய விஷயங்களை வைத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது. அடுத்த கட்டமாக மாணவி கடத்தப்பட்டதாக கூறிய இடம் தேனி என்பதால் தேனி மாவட்டத்திற்கு வழக்கு மாற்றப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.