குஜராத்: கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.