முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோர் அனுபவிக்க வேண்டும் – பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை

சந்தையில் முட்டையின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், முட்டையின் விலை ரூ.28/-ரூ.35/ என்ற அளவில் இருப்பதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. முட்டை விலை குறைவடைந்ததன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் இன்று பாவனையாளர் அலுவலக அதிகார சபை வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளது.

இவ்வாறு முட்டை விலை குறைவடைந்ததை தொடர்ந்து ,முட்டையடன் தொடர்பான பொருட்களின் விலையும் குறைவடைய வேண்டும் எனறும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு நுகர்வோர் அலுவலர்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

மேலும், விற்பனை செய்யப்படும் முட்டை தொடர்பான பொருட்களின் விலையை கடையில் தெளிவாக தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு கடைப்பிடிக்காத வர்த்தகர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.