‘வாய்ப்பே இல்லை…’ – லெபனான் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு

ஜெருசலேம்: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில், “இது உண்மை இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக லெபனான் மீது கொடூரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது இஸ்ரேல். தற்போது, தரைவழி தாக்குதலும் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் சாரை சாரையாக லெபனான் தலைநகர் நோக்கி வெளியேறி வருகின்றனர். இந்த இக்கட்டான நிலையில், வழக்கம் போலவே `போர் நிறுத்தம் வேண்டும்’ என்ற கோரிக்கையை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன. அதாவது, லெபனானில் 21 நாள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இஸ்ரேல் பிரதமர் இது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.