Meiyazhagan: `அதிசயம் நிகழும்போதுதான் ப்யூர் சினிமா நிகழும்!' – மெய்யழகனுக்கு சூர்யாவின் பதிவு!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மெய்யழகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

`96′ பிரேம் குமார் இயக்கத்தில் உறவுகளின் முக்கியத்தை பேசும் படைப்பாக தயாராகி வெளியாகியிருக்கிறது இந்த படைப்பு. இதில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருக்கிறார். இவரை தாண்டி ஶ்ரீ திவ்யா, ராஜ் கிரண், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சூர்யா – ஜோதிகாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று கார்த்தியை கட்டிப்பிடித்தாராம் சூர்யா. அந்தளவுக்கு சூர்யாவை ‘மெய்யழகன்’ எமோஷனலாக்கி இருக்கிறது. இன்று படம் வெளியானதை தொடர்ந்து தனது சமூல வலைதளப் பக்கத்தில் சூர்யா, ” எப்போதும் ஒரு திரைப்படம் பல கணக்கீடுகளிலும், பல காதலிலும்தான் உருவாகும்.

ஆனால் அதிசயம் நிகழும்போதுதான் ப்யூர் சினிமா உருவாகும். மெய்யழகனுடன் பல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கிறது என நம்புகிறேன். அளப்பரிய ஆதரவையும் காதலையும் கொடுக்கும் அனைவருக்கும் நன்றி. இத்திரைப்படத்தின் பயணம் ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தில்தான் தொடங்கியது. கார்த்தி, பிரேம், கோவிந்த் வசந்தா, அரவிந்த்சாமி சார் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி!” என பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.