Riya Barde: வங்கதேச நடிகை ரியா பார்டே மும்பையில் கைது… போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் பறிமுதல்!

மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்டு போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்து வைத்துள்ளனர்.

மும்பை போலீஸார் அடிக்கடி ரெய்டு நடத்தி சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை பிடித்து அவர்களது நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர். மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகரில் பங்களாதேஷ் குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக வசிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதில் பங்களாதேசை சேர்ந்த ரியா பார்டே என்ற அரோஹி பார்டே என்ற நடிகை போலி பாஸ்போர்ட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர் பங்களாதேஷில் படங்களில் நடித்து வந்தவர் என்றும் தெரிய வந்தது.

ரியாவை கைது செய்து விசாரித்த போது அவருக்கு அமராவதியை சேர்ந்த ஒருவர் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளார். ரியா மட்டுமல்லாது மேலும் நான்கு பேருக்கு இது போன்று போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த நான்கு பேர் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்து போலீஸார் தேடி வருகின்றனர்.

ரியாவின் பெற்றோர் கத்தாரில் இருக்கின்றனர். ரியா பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தயாரிக்கும் படங்களில் நடித்து வந்ததாக தெரிகிறது. ராஜ்குந்த்ராவும் கொரோனா காலத்தில் ஆபாச படங்களை தயாரித்து ஒ.டி.டி.தளங்கள் மற்றும் மொபைல் ஆப்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ரியா இதற்கு முன்பு விபசார வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். ரியாவின் தாயார் அமராவதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.