ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’.
இப்படத்தை 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். ஜோதிகா, சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தெலுங்கில் ‘சத்யம்சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ‘மெய்யழகன்’ படத்தை பாராட்டி நடிகர் நாகார்ஜூனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், “நேற்று, என் அன்புச் சகோதரர் கார்த்தி நடித்த திரைப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை என் முகத்தில் ஒரு இனிய புன்னகை தவழ்ந்தது. அதே மகிழ்ச்சியான உணர்வுடன் உறங்கச் சென்றேன். இப்படம் என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்ததோடு, நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘தோழா’ திரைப்படத்தின் அனுபவங்களையும் நினைவுபடுத்தியது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Dear brother Karthi, I saw your film #SatyamSundaram last night!! You and Arvind ji were just too too good… I had a smile throughout watching you and went to sleep with the same smile… Brought back so many childhood memories… and also memories of our film #oopiri .
I’m so…— Nagarjuna Akkineni (@iamnagarjuna) September 30, 2024
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…