பாரா ஓலிம்பிக் : வெண்கல பதக்கம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!

Thangavelu Mariyappan : பாரீஸ் நகரத்தில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட வீரர்கள் பலரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்மிண்டன் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், நித்யஸ்ரீ சிவனும் பாட்மிண்டன் பிரிவில் வெண்கலம் வென்று அசத்தினார். இவர்களைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட தங்கவேலு மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தினார். இதனால் தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு

சென்னை வரும் அக்டோபர் 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு, அடுத்த மாதம் (அக்டோபர்) 19-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில், … Read more

புருனே சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா.. பயணத்தின் நோக்கம் இதுதான்

பண்டார் செரி பெகவான்: இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இதன் மூலம் தென் சீன கடல் வழியாக தடையற்ற வர்த்தகத்தை இந்தியாவால் உருவாக்க முடியும். தென் கிழக்கு ஆசியாவில் Source Link

Rajinikanth: சூர்யாவின் கங்குவா மீது ரஜினிகாந்துக்கு அப்படி என்ன கோபம்?.. காரணம்தான் ஹைலைட்டே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். ஜெய் படத்தினை இயக்கிய இயக்குநர், ஞானவேல் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன்

பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக வழக்கு: பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மர்லினா ஆன் ஆகியோர், தங்களது வீட்டில் பணிபுரிந்த பட்டியலினத்தைச் சேர்ந்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக நீலாங்கரை போலீஸார் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பேரில் கைதான இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆண்டோ … Read more

ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒருவர் பிஹாரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார்: தேஜஸ்வியை விமர்சனம் செய்த பிரசாந்த் கிஷோர்

பாட்னா: ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒருவர் பிஹாரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார் என்று தேஜஸ்வி யாதவை பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தின் போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசும்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும் முன்னாள் துணை … Read more

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழக பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் காலின்ஸ் கவுன்டி பகுதியில் அன்னா என்ற நகரம் உள்ளது. இந்த நகரிலுள்ள சாலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர விபத்து நடந்துள்ளது. சாலையில் வேகமாக வந்த லாரி மீது மோதாமல் இருக்க எதிரே வந்த கார் டிரைவர் ஒருவர் வாகனத்தைத் திருப்பியுள்ளார். இதனால் அந்தக் காரின் பின்னால் வந்த 4 கார்கள் ஒன்றன் பின் … Read more

அன்றைய நாள்.. சமந்தா எதை பற்றியும் யோசிக்கவே இல்லை.. கீர்த்தி சுரேஷ் சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. கடைசியாக அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களை கொடுத்த சூழலில்;

மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்கே அதிக பயன்: உதயநிதியை சந்தித்த பிறகு டி.கே.சிவகுமார் கருத்து

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சென்னையில் சந்தித்தார். மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவுமேலாண்மை திட்ட நடவடிக்கைகளை பார்வையிட, கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று வந்தனர். அப்போது, இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில்சிவக்குமார் சந்தித்தார். முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளதால் அவரை சந்திக்கமுடியாத நிலையில், மரியாதை நிமித்தமாக உதயநிதியை சிவக்குமார் … Read more

குஜராத் மாநிலத்தில் ரூ.3,300 கோடியில் செமிகண்டக்டர் ஆலை நிறுவ மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் சனாந்த் நகரில் ரூ.3,300 கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க கெய்ன்ஸ் நிறுவனத்துக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இது இந்தியாவில் அமையவிருக்கும் 5-வது செமிகண்டக்டர் (சிப்) ஆலை ஆகும். இந்த ஆலை,நாளொன்றுக்கு 60 லட்சம் சிப்களைத் தயாரிக்கும். இவை, ஆட்டோமோட்டிவ், மின்னணு வாகனங்கள், மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள்,தொலைதொடர்பு சாதனங்கள்உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும். தற்போது உலக நாடுகள் … Read more