தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு: பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீனவர் பிரச்சினை, போதைப்பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இருவரும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ஆலோசித்தனர். வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை … Read more