சென்னையில் துண்டு துண்டாக சூட்கேசில் கிடந்த பெண் சடலம்

சென்னை சென்னையில் ஒரு பெண்ணின் சடலம் சூட்கேசில் துண்டு துண்டாக இருந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னையில் துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்ததில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கபட்டுள்ளது. காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு உடனடியாக விசாரணையை … Read more

மருமகள் சைந்தவி நல்ல பொண்ணு.. திரும்பவும் வீட்டுக்கு வரணும்.. ஜி.வி. பிரகாஷ் அம்மா உருக்கம்!

சென்னை: ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியும் ஜி.வி. பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர். ரெய்ஹானா சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய மகளை விட சைந்தவியுடன் தான் அதிகமாக பேசி வருவதாகவும் சைந்தவி அந்தளவுக்கு நல்ல பொண்ணு அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மாத்திக்கலாம் மாலை” என்கிற ஆல்பம் பாடலை

NPS Vatsalya: குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்றது.. யார் முதலீடு செய்யலாம்… விதிமுறைகள் என்ன?

‘குழந்தைகளுக்கு எதாவது சேர்த்து வெச்சுடனும்பா’ என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. இந்த ஆசை நிறைவேறும் விதமாக, கொஞ்சம் நஞ்சமல்ல… கோடிக்கணக்கில் குழந்தைகளுக்கு சேர்க்கலாம், ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் மூலம். கடந்த ஜூலை மாதம் தாக்கலான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா” என்று பேசினார். இதனையடுத்து, இந்தத் திட்டம் நேற்று நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். … Read more

தமிழக அரசின் முத்திரை திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை  

சென்னை: தமிழக அரசின் 11 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, திட்டப் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். தமிழக அரசின் நெடுஞ்சாலை, பள்ளிக்கல்வி, மின்சாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட முக்கியமான 11 துறைகளின் கீழ்வரும் திட்டங்கள் முக்கியமான திட்டங்கள் முத்திரை திட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார். … Read more

“காங்கிரஸும் பாகிஸ்தானும் எப்போதும் ஒரே பக்கம்தான்” – அமித் ஷா விமர்சனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவருவதில் காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஒரே நோக்கத்துடனும், ஒரே திட்டத்துடனும்தான் இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், “ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், ரத்து செய்யப்பட்ட … Read more

வரும் 21 ஆம் தேதி டெல்லி முதல்வராக அதிஷி பதவி ஏற்பு

டெல்லி வரும் 21 ஆம் தேதி டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவி ஏற்க உள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வராக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்ற்ம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் அவர் முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது. முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு நிபந்தனை விதித்ததால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் … Read more

முதன்முறையாக டேட்டிங்.. நண்பர்கள் எச்சரித்தார்கள்.. திருமணம் பற்றி மனம் திறந்த டாப்ஸி

சென்னை: டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி

ஆம்ஸ்ட்ராங் விவகாரம்: `செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு..!'- ராகுலுக்கு பகுஜன் சமாஜ் கடிதம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், பல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்ட அதேவேளையில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்ந்தது. ஆம்ஸ்ட்ராங் – பகுஜன் சமாஜ் கட்சி இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் காங்கிரஸ் … Read more

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான் 

கோவை: கோவை மாவட்டம் பேரூரில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாரை, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (செப்.19) மாலை நேரில் சந்தித்தார். தொடர்ந்து, ஆதீனத்திடம், கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர் வழங்கி ஆசி பெற்றார். அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாரின் இந்த மடம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. முதல்வரை சந்தித்தபோது, கோவைக்கு செல்கிறேன், பேரூர் ஆதீனத்தை மரியாதை … Read more

கொல்கத்தா போராட்டக் களத்தில் கூடாரம் அகற்றம்: மருத்துவர்கள் குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொல்கத்தா சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்தயா பவன் முன்பு இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து பந்தல், மின்விசிறிகளை அகற்றும்படி, பந்தல் போட்டவர்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் தநிலையில், போராட்டத்தின் போது சிறிது இளைப்பார போடப்பட்டிருந்த பந்தல், மின்விசிறி … Read more