இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நிறைவடைந்தது: அனல் மின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு

சென்னை: இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டுக்கும், எஞ்சியதை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்கின்றன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் ஆகும். நடப்பு சீசனில் காற்றாலை மின்நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 4,500 … Read more

பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மகனுக்கு ஐபோன் பரிசளித்த குப்பை சேகரிக்கும் தந்தை

புதுடெல்லி: எக்ஸ் வலைதளத்தில் ‘கர் கே கலேஷ்’ என்ற கணக்கில், ‘தந்தையின் விலைமதிப்பற்ற பரிசு என்ற வாசகத்துடன் ஒரு வீடியோ பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குப்பை சேகரிக்கும் ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சை சுற்றி நிற்பவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். பொதுத் தேர்வில் தனது மகன் நல்ல மதிப்பெண் பெற்றதற்காக ஐபோன் பரிசளித்ததாக அந்த வீடியோவில் அவர் கூறுகிறார். மேலும், தனக்காக ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றும், தன் மகனுக்காக ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள … Read more

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில் 105 பேர் உயிரிழந்தனர். 360 பேர் காயமடைந்தனர். லெபனானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலை, தெருக்கள், கடற்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக லெபனான் எல்லைக்குள் தரைவழியாக … Read more

IND vs BAN: இந்திய அணியில் இருந்து சர்ஃபராஸ் கான் உட்பட 3 வீரர்கள் நீக்கம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பாக கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் 1 செஷன் மட்டுமே போட்டி நடைபெற்ற நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் மழையின் காரணமாக நடைபெறவில்லை. இதனையடுத்து நான்காவது நாள் போட்டி வழக்கம் போல தொடங்கியது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்திய அணி வெறும் 34.4 ஓவரில் 285 ரன்கள் அடித்து … Read more

Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த் (73), நேற்று (செப்டம்பர் 30) இரவு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரஜினிகாந்த்துக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினி ‘வேட்டையன்’ படத்தை முடித்துவிட்டு, லோகேஷின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, அவர் தரப்பிலோ… மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலோ இதுவரையிலும் எந்த தகவலும் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. அதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் … Read more

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற இறுதி கட்ட தேர்தல்: சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்குகிறது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் Source Link

சோறுதான் எல்லாமே.. குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னரான பிரியங்கா.. வெளியிட்ட மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார். இது முன்னதாகவே கணிக்கப்பட்ட முடிவு தான் என்ற போதிலும் பிரியங்காவின் ஆதரவாளர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டைட்டிலை

ரத்த தானம் செய்து உயிர்களை காப்போம்: தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். ரத்த தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ரத்த தானம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி (இன்று) தேசியதன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி: ரத்தம் தேவைப்படுவோருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரத்தம் அளிப்பது மனிதநேயம் மிக்கஉயிர்காக்கும் செயல். ‘ரத்த நன்கொடையின் 20-ம் ஆண்டு கொண்டாட்டம்.. … Read more

சிபிஐ அதிகாரி போல் நடித்து வர்த்தமான் குழும தலைவர் ஓஸ்வாலிடம் ரூ.7 கோடி மோசடி

லூதியானா: பஞ்சாபை சேர்ந்த பத்ம பூஷன்விருது பெற்ற வர்த்தமான் குழுமத்தின் தலைவர் ஓஸ்வாலை 9 பேர்கொண்ட இணைய மோசடி கும்பல்ஒன்று வீடியோ காலில் அழைத்துள்ளது. அப்போது ஒருவர் மும்பை சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, இருக்கைக்கு பின்புறம் சிபிஐ லோகோ, போலீஸ் உடை அணிந்து பக்காவாக பேசி ஏமாற்றியுள்ளார். ஓஸ்வாலின் ஆதார் கார்டை பயன்படுத்தி மலேசியாவுக்கு பார்சல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், அதில் 58 போலி பாஸ்போர்ட்கள் மற்றும் 16 டெபிட் கார்டுகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, … Read more