ஜனாதிபதி மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இடையே சந்திப்பு..

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அமெரிக்க தூதுவர், ஜூலி சாங் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.