Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் பல பகுதிகளில் இயல்பைவிட அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை

இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குப் பெய்யும் வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்துப் பேட்டியளித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “ஜூன் முதல் செப்டம்பர் 30 வரையிலான நாள்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ. இந்தக் காலகட்டத்தில் 33 செ.மீ., அளவுதான் இயல்பான மழைப்பொழிவு. ஆனால், கடந்த நான்கு மாதங்களில் இதுவரை பெய்துள்ள மழைப்பொழிவின் அளவு இயல்பைவிட 18 % அதிகம். இருப்பினும், இது இயல்பான மழைப்பொழிவுதான்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாகவே மழைப் பதிவாகியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமான மழைப் பதிவாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாகவும் மழைப் பதிவாகியிருக்கின்றன.

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்

ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இயல்பைவிட 8 சதவீதமும், இந்த ஆண்டு 14 சதவீதமும் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 74 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவும், இந்த ஆண்டு இதுவரையிலும் 43 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவுப் பதிவாகியிருக்கிறது.

அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இனிவரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரப்போகும் வடகிழக்கு மழையைப் பொறுத்தவரைக் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இயல்பைவிட அதிகமான மழைப் பொழிவு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட தமிழகத்தில் இயல்பைவிட அதிகமான மழைப் பதிவாகவும், தென் தமிழகத்தில் இயல்பாகவும், இயல்பைவிடக் குறைவாகவும் மழைப் பதிவாக வாய்ப்பிருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

மழை குறித்த எச்சரிக்கைகளை, அதிகாரப்பூர்வமான தகவல்களைத் தெரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தமிழ்நாடு அரசு ‘TN-Alert’ என்னும் செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.