ஐ.எஸ்.எல். தொடர்; மும்பை – பெங்களூரு இடையிலான ஆட்டம் டிரா

மும்பை,

இந்தியன் சூப்பர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இதில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி – பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2ம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சி செய்தனர்.

ஆனால் 2ம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி 0-0 என சமனில் முடிந்தது. இந்நிலையில், இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோத உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.