அலரி மாளிகை ஊடாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரை செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்கு..

2005 ஆம் ஆண்டு, கொள்ளுப்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையின் மைக்கல் சுற்றுவட்டத்திலிருந்து அலரி மாளிகை ஊடாக ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்தது.

19 வருடங்களின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இந்த வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. 

 தற்போது, ​ அவ்வீதியின் புணரமைப்பு பணிகள் நடைபெறுவதால், வாகனங்கள் ஒரு திசையில் மாத்திரமே பயணிக்க முடியும். மறுபுறம் ஓடும் பகுதி பணிகள் முடிந்தவுடன் திறக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.