IMF பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று நேற்று (2024.10.4) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

 

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஆசிய பசுபிக் வலய திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் மற்றும் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் கலாநிதி பீட்டர் பிரேயர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க, தென்கிழக்காசியா மற்றும் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான (இருதரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன் எம்.பெரேரா ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.