இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்..

இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணங்களின் போது இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய பணியாற்றியதோடு, இலங்கை அணியின் செயற்பாடுகளை கருத்திற் கொண்டு இலங்கை கிரிக்கெட் செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த நியமனம் 2024 ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் 2026 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.